×

திருவொற்றியூர் பகுதியில் மின் பெட்டி சீரமைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் தெருவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில், மின்வாரியம் சார்பில்,  உயர் அழுத்த மின் பெட்டி, இந்த ெதருவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் கதவு உடைந்த பல நாட்களாக திறந்த நிலையில் இருந்தது. இதனால், மழை காலத்தில் இந்த மின்பெட்டியில் உள்ள வயர்கள் மீது தண்ணீர் பட்டு, மின்கசிவு ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வயர்கள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியாகியது. இதையடுத்து, சாத்தாங்காடு மின்வாரிய அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து, திறந்து கிடந்த மின் பெட்டிக்கு கதவு அமைத்தனர்.



Tags : area ,Thiruvottiyur ,region , Thiruvottiyur, Electrical box, alignment
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்