×

3 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னை: இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்து ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தாமஸ் ஏசுதாசன் தாம்பரம் ரயில்வே இனஸ்பெக்டராகவும், தாம்பரம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி சென்ட்ரல் மத்திய ரயில்நிலைய பாதுகாப்பு பிரிவு மற்றும் கொருக்குப்பேட்டைக்கும், சென்ட்ரல் மத்திய ரயில்நிலைய பாதுகாப்பு பிரிவு மற்றும் கொருக்குப்பேட்டையில் பணிபுரிந்து வந்த சசிகலா சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Inspectors Workplace ,Inspectors Workplace Transfer , 3 Inspectors, Workplace, Transfer
× RELATED 26 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்:போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு