×

மாமல்லபுரத்திற்கு துணை ஜனாதிபதி வருகை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம் : டிஐஜி, கலெக்டர் தலைமையில் நடந்தது

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 27ம் தேதி பகல் 12 மணிக்கு மாமல்லபுரத்துக்கு குடும்பத்தோடு வந்து தங்குகிறார். மறுநாள் 28ம் தேதி காலை மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு சென்று அங்குள்ள கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம் உள்ளிட்டவற்றை பார்வையிடுகிறார். பின்னர், வட நெம்மேலியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி பாதுகாப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் டிஐஜி தேன்மொழி மற்றும் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாதுகாப்பு அதிகாரி சுரேஷ்குமார், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், மாமல்லபுரம் டிஎஸ்பி (பொறுப்பு) அருள்மணி, இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vice President ,visit ,Collector ,Mamallapuram Security ,DIG , Vice President ,Mamallapuram Security measures intensified, DIG headed by Collector
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...