×

9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முதன்மை அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை : புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை குறித்து முதன்மை பயிற்சியாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பயிற்சி அளித்தார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மீதம் உள்ள 7 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட வார்டு மறுவரையறை முதன்மை பயிற்சியாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று பயிற்சி அளித்தார். இதில் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Ward ,Districts ,Chief Officers ,Chief Officers of Training , Training of Ward Redefined ,Chief Officers, 9 Districts
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி