×

இந்தியாவுக்கு எதிராக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும்: கர்நாடக பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிராக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும், என கர்நாடக பாஜக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உரிமைக்காக போராடும் மக்களின் போராட்டங்களை ஒடுக்க ஆளும் மத்திய அரசு, தனது மதவாத குண்டர்களை ஏவி பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தன. இருப்பினும், எவ்வித சலனும் இல்லாமல் மக்கள் தங்களது போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பெங்களூருவில் சிஏஏவுக்கு எதிராக பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் AIMIM கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றிருந்தார்.

அப்போது, அமுல்யா லியோனா என்ற கல்லூரி மாணவி, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டது பெரும் பரபரப்புக்கு வித்திட்டது. மேடையில் இருந்த ஓவைசியும் அந்த பெண்ணின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பெங்களூரு போலிஸார் அமுல்யா மீது தேசத்துரோக பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக பாஜக அமைச்சர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, நமது உணவை சாப்பிட்டு விட்டு தேசத்துக்கு எதிரான கருத்துகளை கூறுகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களை அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். இதுகுறித்து பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார். மீடியாக்கள் மூலம் பிரதமருக்கு நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுதவுள்ளேன், என கூறியுள்ளார். பாட்டீலின் இந்த கருத்து போராட்டக்காரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களை ஒடுக்கும் வகையில் கொண்டுவரப்படும் சட்டங்களை எதிர்த்து போராடினால் தேசத் துரோகி என்பதா எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


Tags : minister ,BJP ,Karnataka ,traitors ,BC Patil ,spot ,Indian ,anti-nationals , Karnataka, BJP, Minister, B C Patil, anti-nationals,shoot
× RELATED இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு...