×

போக்சோவில் முதியவர் கைது

தண்டையார்பேட்டை: தூத்துக்குடி மாவட்டம், ஸ்பிக் நகரை சேர்ந்த நடராஜன் (62), சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்  இரவு தண்டையார்பேட்டை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நடராஜனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர், அவரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, சிறுமிக்கு நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Older ,Arrested,Bokso
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...