சென்னை: சென்னை கொடுங்கையூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிவதால் சுற்றுவட்டாரம் புகைமூட்டமாக உள்ளது. புகை மூட்டத்தால் கொடுங்கையூரில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மணலி சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.