சென்னை: மாணவரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தியை செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய தண்டனை பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.