சென்னை: கடல் வாணிபத்தில் தமிழகம் பல ஆண்டு காலமாகவே சிறந்து விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கல்வி, கலாச்சாரம், மருத்துவம் உள்ளிட்டவைகளில் தமிழகம் சிறந்து விலங்குவதால் தான் சிறந்த மாநிலத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.