×

பெண் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சென்னை: செய்யூர் அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியா (28). அதே கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன், சத்தியாவிடம் 50 ஆயிரம் மற்றும் நகைகள் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பி கொடுக்க வில்லை. இதுகுறித்து சத்தியா, மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு, உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதில் பெரும்பாலான விசாரணைகள் முடிவடைந்துவிட்டன. வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம், சாட்சி விசாரணை மட்டுமே நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதிபதி இருதயராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags : Inspector , Dividend,e female inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு