×

யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்வதற்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இலங்கை அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

 இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு முதல் சர்வதேச விமானங்களை இயக்க தொடங்கிய பலாலி விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ₹11.83 கோடி வழங்குவதாக ஏற்கனவே இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக இந்தியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி விமான நிலைய முனையத்தில் மாற்றம் செய்தல், மின்விநியோக சேவை, பயன்பாட்டு சேவை, போக்குவரத்து வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.

Tags : Jaffna ,Palali Airport , Palali Airport ,Jaffna, Indo-Lanka, Accord
× RELATED மீனவர் பிரச்னை குறித்து முக்கிய...