×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கோடை விடுமுறையில் மட்டும் பிளாட்பார டிக்கெட் விலை உயர்வு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்: கோடை விடுமுறை நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை 3 மாதங்களுக்கு நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது. அதன்படி தற்போது ரூ.10 ஆக உள்ள நடைமேடை டிக்கெட் உயர்த்தப்பட்டு ரூ.15க்கு விற்கப்படும். நடைமேடை டிக்கெட்டை மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரிலும், வால்டாக்ஸ் சாலை பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டரிலும் பெறலாம். மேலும் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தின் 5வது கேட் அருகில் பிரத்யேகமாக டிக்கெட் கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ேமலும் 3 மாதம் அமலுக்கு பிறகு ஜூலை மாதம் முதல் மீண்டும் நடைமேடை டிக்கெட் ரூ.10க்கு விற்கப்படும்.  இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : summer holidays ,Central Railway Station , Central Railway Station, Summer Holidays, Platform Ticket Prices
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது