திருவனந்தபுரம்: அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், 2ம் கட்டமாக ரூ.8 லட்சம் வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்த அரசு பேருந்து ஊழியர்கள் பைஜூ, கிரீஷ் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.