திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பூர் அவிநாசி, சேலம் ஓமலூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.