×

திருமானூர் பகுதியில் நெடுஞ்சாலை தடுப்பு கட்டைகளில் வர்ணம் பூசும் பணி மும்முரம்

அரியலூர்: திருமானூர் பகுதி நெடுஞ்சாலைகளில், வர்ணம்பூசுதல், சாலை யோரங்களில் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் சார்பில், கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் அறிவுரைப்படி, திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழூர் - புள்ளம்பாடி - திருமழபாடிசாலை, திருமானூர் - பழையபடிசாலை, அரண்மனைக்குறிச்சி - இலந்தை கூடம் சாலை, கீழக்காவட்டாங்குறிச்சி - வெங்கனூர் சாலை மற்றும் இதர சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் பயணிக்கும் வகையில், சாலை ஓரங்களில் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் எண்கள் எழுதுதல், பாலங்களில் உள்ள தடுப்பு கட்டைகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணி நடைபெறுகிறது.

 சாலையோர புருவங்களுக்கு கிராவல் நிரப்புதல், சாலைகளில் வெள்ளை கோடுகள் வரைதல், சாலை ஓரங்களில் இருந்த முள்செடிகளை அப்புறப்படுத்துதல், மரங்களுக்கு நீர்ஊற்றுதல் போன்ற பராமரிப்புபணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் மற்றும் இளநிலை பொறியாளர் ராஜா ஆகியோர் மேற்பார்வையில், சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்களை கொண்டு மேற்படி பணிகளை செயல் படுத்திவருகிறார்கள்.

Tags : area ,Thirumanur , Highway,Blocking Works, Thirumanur area
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு