×

ஜெர்மனியில் 2 மதுபார்களில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு : 9 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

பெர்லின் : ஜெர்மனியின் ஹனாவ் நகரில் 2 மதுபார்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். பிராங்க்பேர்ட் நகருக்கு அருகே அமைந்துள்ள மக்கள் நெருக்கும் மிகுந்த ஹனாவ் நகரில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் இருந்த மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து அந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில், 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.ஹெலிகாப்டர்கள் மூலம் ரோந்து மேற்கொண்டு கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தற்போது வரை தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மர்மநபர்கள் நடத்திய தாக்குதலால் ஜெர்மனியின் பிராங்க்பேர்ட் மற்றும் ஹனாவ் நகரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Tags : Mystery shootings ,Germany ,Brewers ,Firing ,Frankfurt ,Hanau ,Mysterious Persons , Germany, Brewers, Mysterious Persons, Firing, Frankfurt, Hanau
× RELATED சில்லி பாய்ன்ட்…