சென்னை: ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். 11 பேர் மீதான நடவடிக்கை பற்றி எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். தமது பரிசீலனையில் உள்ள விஷயத்தை சட்டப்பேரவையில் பேச முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.