×

வாரணாசியில் விதவை பெண் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம் : பாஜக எம்.எல்.ஏ., மருமகன், 5 மகன்கள் மீது வழக்குப்பதிவு

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் விதவை பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக பாஜகவை எம்எல்ஏ மற்றும் அவரது 5 மகன்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்துள்ள பெண் வாரணாசி அடுத்துள்ள ஒரு குக் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 35 வயதான இவர், தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தனியாக வசித்து வந்தார். தம்மை படோஹி தொகுதியில் பாஜக எம்எல்ஏ திரிபாதி மற்றும் அவரது 5 மகன்கள் கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

தம்மை கெடுத்து இவர்கள் 6 பேருக்கும் இரையாக்கியது எம்எல்ஏவின் மருமகனான சந்தீப் குமார் என்றும் அந்த பெண் புகார் கூறியுள்ளார். இந்த குற்றச் சாட்டின் முகாந்திரம் உள்ளதால் 7 பேர் மீதும் படோஹி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தல், இசைவின்றி அணுகுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதவை பெண்ணை மிரட்டி 4 ஆண்டுகளாக எம்எல்ஏவும் அவரது மருமகன் மற்றும் 5 மகன்கள் பலாத்காரம் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Widow girl ,Varanasi ,sons ,BJP ,MLA , BJP, MLA, son-in-law, prosecution, sex, rape, Varanasi, widow, woman
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை