நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற 12 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 2 ஆயிரம் பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 1500 பேர் மீதும், தென்காசியில் 120 பேர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.