×

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளால் இடையூறு: மொத்த வியாபாரிகள் புகார்

அண்ணாநகர்: சென்னை, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அலுவலகத்தில் சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபார கடைகள் மற்றும் சிறு வியாபார கடைகளும் உள்ளன. இதில் மொத்த வியாபாரிகள் மூட்டைகள் இறக்க வரும் இடத்தில் குடோன், நடைபாதை  உள்ளிட்ட இடங்களில் சில்லரை வியாபாரம் செய்கின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு முதன்மை அதிகாரி கோவிந்தராஜ், வியாபாரிகளிடம் சமரசம் பேசி இந்த பிரச்னை குறித்து வரும் 21ம் தேதி அன்று அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசுவதாக உறுதி அளித்தார். இதையேற்று வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : retailers ,Coimbatore , Coimbatore, Vegetable Market, Retailers
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு