பெங்களூரு: சாமியார் நித்தியானந்தாவை உடனே கைது செய்ய கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் நித்திக்கு தரப்பட்டிருந்த ஜாமின் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ராம்நகர் நீதிமன்றம் செயல்படுத்தியது.