×

பஞ்சப்படி உயர்த்தி வழங்கக்கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை, பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அமைப்பின் சென்னை மண்டல கிளை தலைவர் நீலமேகம், மாநில துணைத்தலைவர் வீரராகவன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Tags : Transport Pensioners ,famine transport pensioners , Raise ,famine, Transportation ,protest
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...