×

எஸ்.டி. பட்டியலில் சேர்க்கக்கோரி டெல்லியில் மீனவர்கள் போராட்டம்

புதுடெல்லி: மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தனி அரசியல் பிரதிநிதித்துவம் பெறுமாறு வழிவகை செய்ய வேண்டும் என கடல்சார் மக்கள் நல சங்கத்தின் சார்பில் டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.  கடல்சார் மக்கள் நல சங்கத்தின் சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோயில், தூத்துக்குடி மற்றும் புதுவை மாநிலத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து பேரணியாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற அவர்களை அப்பகுதி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Tags : Fishermen ,Delhi ,SD Fishermen , S.D. List, Delhi, Fishermen Struggle
× RELATED இலங்கை சிறையிலிருந்து...