×

கறம்பக்குடி அருகே சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பழுதடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓடப்பாவிடுதி ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன இந்த கிராமத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஊராட்சியில் திருப்பக் கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் ,பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்த நிழற் குடை புதிதாக கட்டப்பட்டு அனைத்து தரப்பு பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை மூலம் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நிழற்குடை பெரிதும் பழுதடைந்து. எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகின்றன.

மேலும் இதன் காரணமாக அந்த இடத்திற்கு செல்வதை முழுவதும் பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் முற்றிலும் தவிர்த்து விட்டனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம் என்று அப்பகுதி மக்கள் கூறினர். எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : commuters ,Karambakkudi ,passenger ,bus stop , Karambakkudy, bus stop, revamp, passenger, emphasis
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...