சென்னை: தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பில்லை என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். குடியுரிமை தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.