×

விபத்தா ? தற்கொலையா?: 'நான் காதலில் தோல்வி அடைந்தேன்'என பைக்கில் பயணித்தவாறு வாட்ஸ்அப்பில் வீடியோ பதிவிட்ட வாலிபர் ஆட்டோ மோதி உயிரிழப்பு

திருமலை : காதல் தோல்வியுற்ற வாலிபர் ஒருவர், பைக்கில் பயணம் மேற்கொண்டிருந்த போது, தான் காதலில் தோல்வி அடைந்தேன் என்று கூறிய நிலையில், அதனை வீடியோ எடுத்து, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து எதிர்திசையில் வந்த ஆட்டோவில் மோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ராஜம்பேடடையை சேர்ந்த வெங்கட் கவுட்டு என்பவருக்குஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவரின் 19 வயது மகனான பிரதீப் கவுட்டுக்கு சரியாக படிப்பு ஏறாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ராஜம் பேட்டையில் உள்ள ஒயின்ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று பிரதீப் தன்னுடன் பணிபுரியும் நண்பருடன் சேர்ந்து வெமுலவாட புறப்பட்டார். பின்னர் மாலை வெமுலவாடாவிலிருந்து பிரதீப் கவுட் மட்டும் தனியாக பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்

அப்போது, காமாரெட்டி மண்டலத்தின்  உக்ரவாயி பகுதியில் உள்ள சாய் பாபா கோயில் அருகே பிரதீப் கவுடா பைக் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பிரதீப் கவுட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் இந்த விபத்து குறித்த விசாரணையின் போது, பிரதீப் கவுட் தனது பைக்கில் சென்றபடி தனது செல்போனில் தான் காதலில் தோல்வி அடைந்தேன் என்று வேதனையுடன் கூறியபடி வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்டோ மோதி உயிரிழந்துள்ளார்.

ஆதலால் பிரதீப் தானாக சென்று தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என வேகமாக சென்று ஆட்டோவில் மோதி விபத்தில் இறந்தாரா அல்லது தவறுதலாக ஆட்டோ,  பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பிரதீப் உயிரிழந்த தகவலறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் காமா ரெட்டி மருத்துவமனை முன்பு திரண்டு அழுது வருவது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Crash ,Suicide Crash ,auto crash , Love, Failure, Bike, Telangana, Video, WhatsApp, Status
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!