திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லடசம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் போலீஸ் நடத்திய சோதனையில் காரில் செம்மரம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்பூசணிப் பழங்களுக்கு அடியில் செம்மரங்களை மறைத்து கடத்தி வந்த சதிஷ், டேவிட் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.