×

வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் வியாபாரியை சரமாரி அரிவாளால் வெட்டிய மற்றொரு வியாபாரியை போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜன் (45), அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். அதே மார்க்கெட்டில் கிருபாளினி (52) என்பவரும் காய்கறி கடை நடத்துகிறார். இருவருக்கும் குடிபோதையில் நேற்று முன்தினம் மதியம் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜன் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த கிருபாளினி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜனை சரமாரி வெட்டினார். இதில் ராஜன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, கிருபாளினி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ராஜனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வில்லிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கிருபாளினியை நேற்று அதிகாலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : dealer ,Volunteer , Volunteer ,dealer, , sickle
× RELATED சொல்லிட்டாங்க…