×

இஸ்லாமிய அமைப்புகள் வரும் 19ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி மனு

சென்னை : இஸ்லாமிய அமைப்புகள் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி ஏ ஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த மூறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து இது தொடர்பாக வராகி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இத்தகைய போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுக்கிற்கும் பாதிப்பை ஏற்படும் என்பதால் பிப்ரவரி 19 ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள  தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : organizations ,protests , Islamic Organizations, High Court, Legislature, Petition
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...