டெல்லி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தொடர்பான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் அடைத்து தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தது.