×

3வது நாளாக ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை: தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 14ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் சார்பில், சென்னை பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் பால் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் 3 நாட்களாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்றுடன் ஆவின் பால் இருப்பு முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நாளை முதல் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகம் சார்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Aavin ,Tamil Nadu , Aavin milk tanker contract trucks, Strike, Tamil Nadu, Milk shortage
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...