சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என 2 தேர்வுகள் நடத்துவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையிட்டுள்ளார். சமூக நிதிக்கு எதிராக அவசரமாக நியமன ஆணைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.