×

கம்பிவேலியை அகற்ற எதிர்ப்பு: வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முற்றுகை

வத்திராயிருப்பு: கம்பிவேலியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வத்திராயிருப்பில் தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் செல்லும் வழியில் சின்னஊரணி அருகில் கருப்பசாமி கோயில் உள்ளது. கோயிலை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பகுதியிலுள்ள இடத்தில் தாலுகா அலுவலகம் கட்ட வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கம்பிவேலியை அகற்ற சென்றனர். இதற்கு ஒரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கம்பிவேலி அகற்றுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கம்பிவேலியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் திரண்டு நேற்று மாலை வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் ராஜா உசேன், இன்ஸ்பெக்டர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். 1 மணிநேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : removal ,Removal of Wire ,Vattirappu taluk Office , Wire fence, Vatrapuriya taluk, siege
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...