சென்னை: சென்னை விமான நிலையத்தில் முகமதுகான் பதான் என்பவரிடம் ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இறைச்சி வெட்டும் கத்தியின் கைப்பிடியில் மறைத்து வைத்து 1.16 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது பயணி சிக்கினார், இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.