சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டத்துக்குள் பாஜகவினர் மாறுவேடத்தில் புகுந்து கற்கள் வீசியதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி தான் காரணம் என்று டி.ஜி.பி.யை சந்தித்த பின் இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர்.