சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய போலீசை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திருப்பிப்பெற மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.