×

மெட்ரோ ரயில் துவக்க விழாவுக்கு அழைக்காதது மிகுந்த வேதனை தருகிறது : மம்தா பானர்ஜி உருக்கம்

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தட தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்காதது வேதனை அளிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தட சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கொடியசைத்து நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பங்கேற்க,  முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  இது ெதாடர்பாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “கிழக்கு -மேற்கு மெட்ரோ வழித்தட திட்டத்துக்காக நாம் கடினமாக பணியாற்றினோம். ஆனால், தொடக்க விழா குறித்து எனக்கு தகவல் கூட தெரிவிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்றார். 


Tags : inauguration ,Metro Railway ,Mamta Banerjee , Mamata Banerjee's dismay, Metro train launch
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை...