லக்னோ: உ.பி கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகள் இறந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் டாக்டர் கபீல் கான். சமீபத்தில், அலிகார் பல்கலையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதால் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்., இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என போலீஸ் தெரிவித்துள்ளது.