×

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடைகளில் ஐ.டி ரெய்டு

திருவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பால்கோவா, உலக பிரசித்தி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதையடுத்து கடைகளில் பால்கோவா விற்பனை 2 மடங்காக அதிகரித்தது. இந்நிலையில், 3 பால்கோவா தயாரிக்கும் இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது, தினமும் எவ்வளவு பால்கோவா உற்பத்தி செய்யப்படுகிறது? எத்தனை கடைகளுக்கு எவ்வளவு சப்ளை செய்யப்படுகிறது உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ெதரிகிறது. இதைத்தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பால்கோவா உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் விசாரணையை தொடர்ந்தனர்.

Tags : Srivilliputhur Balkova Stores ,IT Raid , IT Raid , Srivilliputhur ,Balkova Stores
× RELATED தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு!!