டெல்லி: தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் நிலுவைத் தொகை செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது. வோடபோன் ரூ.55,000 கோடி, ஏர்டெல் ரூ.35,500 கோடியை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் உள்ளிட்டவற்றுக்கான தொகையை இன்றிரவு 11.59க்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.