×

பெரம்பலூர் அருகே தேர்வில் பெயிலானதால் கண்டிப்பு: கிணற்றில் குதித்து மகள் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தந்தை திட்டியதால் கிணற்றில் குதித்து மகள் தற் கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த தந்தையும் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொ லை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம்கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொ ன்னுசாமி.  இவரது மகள் மகாலட்சுமி(16). இவர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், பெரம்பலூரில் உள் ள தனியார் டுட்டோரியல் சென்டரில் டியூசன் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, தான் அணிந்திருந்த கண் கண்ணாடியை கீழே தவறவிட்டதால் உடைந்து போனது.

இதனைப் பார்த்த அவரது தந்தை பொன்னுசாமி, ‘ஏற்கனவே 10ம் வகுப்பு பெயிலா போயிட்ட, போட்டுருக்கிற கண்ணாடியக்கூட பத்திரமா பாத்துக்க முடியலன்னா, எப்படி பாஸ் பண்ணுவ?’ எனத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டிலிருந்து வேகவேகமாக ஓடிச்சென்று, சிறுவாச்சூர் சாலையில் பெரியசாமி மலையருகே,  தனது தாத்தா ராமன் என்பவரது வயல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொ ண்டார். மகாலட்சுமியை மீட் க பெரம்பலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, ஒரு மணிநேர போராட்டத்திற்குப்பிறகு, மகாலட்சுமியின் சடலத்தை மீட்டனர்.

ஊர்மக்கள் மகாலட்சுமி தற்கொலை செய்துகொண்ட கிணற்றருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, சாதாரணமாகக் கேள்வி கேட்டதால்,  மகளின் சாவுக்கு காரணமாகி விட்டோமே, இனி மகளின் சாவுக்கு நானே காரணமென ஊர் பழி பேசுமே  என நினைத்து மனமுடைந்த பொன்னுசாமி,  இரவு வீட்டுக்கு வந்து, தனது வீட்டில் வயலுக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்துபோனார்.

சிறிது நேரத்தில் பொன்னுசாமி மனைவி செல்லக்கண்ணு  அழுதபடி வீட்டுக்கு வந்த போது, வீட்டில் கணவனும் மருந்து குடித்து இறந்து கிட ந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்து கதறித் துடித்தார். இதனையறிந்து நொச்சியம் கிராமத்தினர்  சோகத்தில் மூழ்கினர். இந்த சம்பவம் தொட ர்பாக நொச்சியம் கிராம நிர்வாக அலுவலர் கார்த் திக் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் எஸ்.ஐ.பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Perambalur , Preambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி