சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...
*11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் தொடரும்
*பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு
*இலவச மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.966.46 கோடி ஒதுக்கீடு
*தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு ரூ.918 கோடி ஒதுக்கீடு