சேலம்: ஏற்காட்டில் கோடைக்கு முன்பே மலைப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து வருகின்றன. மரங்களில் இலைகள் இல்லாமல் மொட்டையாக காட்சியளிக்கின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதைதவிர பொங்கல், தீபாவளி பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால் ஏற்காட்டில் காய்ந்த மரங்கள் பசுமையாக மாறின.
Tags : highway ,Yercaud ,Yercaud Mountain , Even before the summer
Trees on the Yercaud Mountain Pass