×

திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை போலீசார் கைது!

திருப்பதி: திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் ரவி சங்கருக்கு இன்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆர்.எஸ்.ஐ. வாசு மற்றும் விஜயநரசிம்மலு தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது இன்று அதிகாலை ஸ்ரீனிவாச மங்காபுரம் எதிரே உள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு கார் மற்றும் ஒரு டெம்போ டிராவலர் வருவதை பார்த்த போலீசார் அதனை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி தப்பி செல்ல முயன்றுள்ளனர்.  ஆனால், அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து, வாகனத்தில் இருந்த 52 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார், தமிழகத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,kidnapping ,Tirupati , Tirupati, cemmaram, Trafficking, arrest
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...