டெல்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த நமது துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.