×

இரட்ைடப்படை தேதியில் உறவு கொண்டால் ஆண் குழந்தை: மராத்தி போதகரின் பிரசங்கத்தால் சர்ச்சை

புனே: ஒரு பெண்ணுடன் இரட்டைப்படை தேதியில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று பிரபல மராத்தி போதகர் இந்தூரிகர் மகாராஜ் செய்த பிரசங்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவருடைய இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரிகர் மகாராஜ் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரசங்கம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு பெண்ணுடன் இரட்டைப்படை தேதியில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும். ஒற்றைப்படை தேதியில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும். அமங்கலமான நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தை குடும்பத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இதேபோல உறவு கொள்ளும் நேரம் தவறினால், குழந்தை தரமற்றதாக பிறக்கும்” என்றார். அவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதுடன் சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது. இதற்கிடையே, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று பரிசோதனை ெசய்வதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்தூரிகர் மகாராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.


Tags : army , Baby Boy
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...