×

ரயில்வே நடைபாலம் இடிந்து 8 பேர் காயம்: மபி.யில் பரபரப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ரயில் நிலைய நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 பயணிகள் காயமடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபால் ரயில் நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் பயணிகள் கூட்டம் இருந்தது. அப்போது, நடைமேடை 2 மற்றும் 3க்கு நடுவே, மேலே கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் கீழே நின்றிருந்த பயணிகள் மீது சிலாப்புகள் விழுந்து உடைந்தன.

இதில், 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உள்ள அம்மாநில முதல்வர் கமல்நாத், வேண்டிய மருத்துவ உதவிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Railway bridge ,railway bridge collapses , Railway corridor, 8 injured
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...