×

போதை பொருட்களை கடத்த விட மாட்டோம்: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: டெல்லியில் பீம்ஸ்டெக் கூட்டமைப்பின் நாடுகள் பங்கேற்ற, ‘வங்காள விரிகுடா  போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை’கள் குறித்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “இந்தியாவில் இருந்து எந்த போதை பொருளும் வெளியே செல்லாது அதே நேரத்தில் எந்த போதைப்பொருளும் இந்தியாவிற்குள் வராது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அனைத்து போதை பொருளுக்குமான கொள்கையில் இந்தியா எந்த சமரசமும் செய்து கொள்ளாது. பீம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. போதை பொருள் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதேபோல், உலக நாடுகளில் போதை பொருளை கட்டுப்படுத்துவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்,” என்றார்.

Tags : Amit Shah , Drugs, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...