×

5 பெண்களை திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்: முதல் மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: ஐந்து பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது அவருடைய முதல் மனைவி நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  சென்னை வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் பானுரேகா. பொறியியல் பட்டதாரி. இவரும் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பிரபாகரன் என்பவரும்  1994ல் திருமணம் செய்து ஒரு வருடம் வாழ்ந்துள்ளனர். அப்போது பானுரேகா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிரபாகரனின் பெற்றோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் பிரபாகரனை விட்டு பிரிந்து தன்னுடைய குடும்பத்தாருடன் பெரம்பூரில் வசித்து வந்துள்ளார்.

அப்போது 1995ம் ஆண்டு பானுரேகாவின் பெற்றோர் அவருக்கும் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் பிரபாகரன் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு பானுரேகாவிற்கும் தனக்கும் சட்டபடி திருமணம் நடந்துள்ளது என்று கூறி மிரட்டியதையடுத்து ஸ்ரீனிவாசன் பானுரேகாவை பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் மீண்டும் 2000ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் பானுரேகா தனக்கு நடந்ததை கூறியதையடுத்து அதை ஏற்றுக் கொண்டு அவர் பானுரேகாவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் பிரபாகரன் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் முருகானந்தம் பானுரேகாவை பிரிந்து சென்று விட, பெங்களூருவில் பானுரேகா குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமணத்தில் பிரபாகரனை மீண்டும் சந்தித்த போது அவர் பானுரேகாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறியதையடுத்து அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை வந்த பானுரேகா பிரபாகரனுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். பானுரேகாவிடம் இருந்து அவ்வப்போது பணம் பெற்றுள்ளார். அவர் பணம் இல்லையென்று கூறும்போது அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் பிரபாகரனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அறிந்து அதை கேட்ட போதும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வேறுவழியின்றி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது பிரபாகரன் மீது ஏற்கனவே 5 பெண்கள் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. வசதியான பெண்களை தன்னுடைய வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பதை பிரபாகரன் வாடிக்கையாக கொண்டுள்ளதாக பானுரேகா குற்றம்சாட்டினார்.

Tags : Sub-Inspector ,Office ,women ,Commissioner , 5 Woman, Marriage, Sub-Inspector, First Wife, Commissioner's Office, Complaint
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது