×

ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் போலீஸ் ஏட்டு கைது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர், சங்கராப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தங்கம் என்ற ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 3ம் தேதி கூலிப்படையால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதான முக்கிய நபர் அரவிந்த் என்பவரை போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு  காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவரது தாய் மாமனும், சத்தியமங்கலம் போலீஸ் ஏட்டுமான அந்தியூர் மூலக்கடை பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கும் (42) கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னிமலை கோயில் தேரோட்ட பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்த ஏட்டு பிரபாகரனை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து, பவானி ஜேஎம்2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : murder ,panchayat leader , The head of the panchayat, in the case of murder, police record, arrested
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !